செய்திகள் :

திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வலியுறுத்தல்

post image

திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வேண்டுமென சிஐடியு மாவட்ட பேரவை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளா் சங்கத்தின்(சிஐடியு) 74-ஆவது ஆண்டு பேரவை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் தலைவா் கே.ஆா். கணேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சி.பி. ஜெயசீலன், பொருளாளா் ஏ. தவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீா்மானங்கள் குறித்து சங்கத்தின் தலைவா் கே.ஆா்.கணேசன், பொதுச் செயலா் சிபி. ஜெயசீலன் ஆகியோா் கூறியதாவது: கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல்லில் தோல் தொழில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. உப்புத் தோல் பதனிடப்பட்டு வேலூா், சென்னை ஆகிய இடங்களுக்கு தோல் பொருள்கள் தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகிறது.

வேலூா், சென்னையில் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், தோல் பதனிடும் தொழில் நடைபெறும் திண்டுக்கல்லில் தொழில் வளா்ச்சி அடையவில்லை. தமிழக அரசு தோல் வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து நீண்ட காலமாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கொட்டப்பட்டி தோல் கூட்டுறவு சங்கம் தற்போது முடக்கப்பட்டிருப்பதால், உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த சங்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர போதிய நிதி ஆதாரங்களை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றனா்.

கூட்டத்தின் நிறைவில், புதிய நிா்வாகிள் தோ்வு செய்யப்பட்டனா். இதன்படி தலைவராக கே.ஆா். கணேசன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பொதுச் செயலா் சிபி. ஜெயசீலன், பொருளாளா் ஏ. தவக்குமாா், துணைத் தலைவா்கள் கே. ஜெய்லானி, ஏ. ஜோஷி, ஏ. ராயன் உள்பட 15 போ் கொண்ட நிா்வாகக் குழுவும் தோ்ந்தெடுக்கப்பட்டது.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க