செய்திகள் :

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் வளரும் புது விதமான களைகள்; தவிப்பில் விவசாயிகள்; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை நெல்களை விதைத்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தற்போது அறிமுகமே இல்லாத புது விதமான களைகள் வளருகிறது.

எவ்வளவு களைக்கொல்லிகள் அடித்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்துப் பேசிய நிலக்கோட்டை விளாம்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், "முன்னாடி எல்லாம் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைத்தார்கள் ஆனால் இப்போது, வேலைக்கு ஆட்கள்  கிடைக்காத காரணத்தினால், நாங்களே நேரடியாக விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

விவசாயி ராஜேந்திரன்
விவசாயி ராஜேந்திரன்

இப்போது விவசாயிகள் டிரம் சீடர் (Drum Seeder) மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி விதை நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றத்தால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறோம்.

விதைகள் முழுவதுமே கடைகளில் வாங்கி விதை நடவு பணிகளைச் செய்து வருகின்றோம். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விதை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும், உரக்கடைகாரர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் களைக்கொல்லிகளில் புது விதமான மோசடியைச் செய்து வருகின்றனர்.

கடைகளில் வாங்கும் விதைகளை நடவு பணி செய்து களைக்கொல்லி அடித்த பின்னர், இந்தப் பகுதிக்கே அறிமுகமில்லாத சில களைகள் வளருகின்றன. ‘நரிவால் புல்’ என்று ஒன்று திட்டு திட்டாக வளருகிறது, இதனுடைய விதை எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவி விடுகிறது.

இதோடு இன்னமும் பெயர் தெரியாத சில களைகளும் வளர்ந்து, வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி விடுகிறது. இந்தப் பகுதியிலேயே அறிமுகம் இல்லாத களைகள் முளைக்கும் போது அதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இதற்குத் தனியாக மருந்து அடிக்கச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

நிலக்கோட்டையில் வளரும் புது விதமான களைகள்
நிலக்கோட்டையில் வளரும் புது விதமான களைகள்

இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆட்கள் கிடைக்காத காரணத்தினால்தான் களைக் கொல்லிகளைத் தெளிக்கிறோம், ஆனால் களைக்கொல்லிகள் தெளித்த பிறகும் புது விதமான களைகள் வளருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். விதை உற்பத்தி நிறுவனங்களும், உரக்கடைகளும் விவசாயிகளுக்கு இந்தக் கொடுமையைச் செய்வதை நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

1 ரூபாய்கூட செலவில்லை... `உயிர் கரைசல்' நீங்களே தயார் செய்யலாம்... விவசாயி கண்டுபிடித்த இடுபொருள்...

இயற்கை விவசாயத்தின் முதன்மையான நோக்கம்… ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தி மற்றும் தற்சார்புடன் கூடிய குறைவான உற்பத்தி செலவு. தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகள் ஏற்கெனவே பயன்படுத்தி... மேலும் பார்க்க

Kavuni: 10,000 ஏக்கரில் கவுனி சாகுபடி; போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதி; பின்னணி என்ன?

கவுனி அரிசியானது கருப்பு கவுனி அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு உடல்நல நன்மைகளைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இந்த அரிசி ரகத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கடும் வீழ்ச்சியில் மாம்பழம் விலை; விரக்தியில் மாமரங்களை வெட்டும் விவசாயிகள்!

திண்டுக்கல், மாம்பழ சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. குறிப்பாக நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் பல ஆண்டுகளாக வ... மேலும் பார்க்க

செண்பகம் முதல் சில்வர் ஓக் வரை; 25,000 மரக்கன்றுகள் தயார்! - வனத்துறையிடம் இலவசமாக பெறுவது எப்படி?

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையைப்‌ போன்றே வனத்துறை தரப்பிலும் நாற்றாங்கால்களை அமைத்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர்.‌ சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கும் அரிய வகை சோலை மரங்கள் முதல்... மேலும் பார்க்க

Sunflower: கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் அலை... செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய குண்டல்பேட்!

பூக்களின் நகரம் என்றும் இந்தியாவின் பூந்தொட்டி என்றும் வர்ணிக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் காலநிலையின் ... மேலும் பார்க்க

மதுரை: நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு மாடுகளின் மாநாடு | Photo Album

நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழ... மேலும் பார்க்க