செய்திகள் :

திண்டுக்கல்: மாநகராட்சி ஒப்பந்ததாரர் காரில் கடத்திக் கொலை; ஐந்து பேர் கைது!

post image

திண்டுக்கல், மேட்டுபட்டியை சேர்ந்தவர் முருகன் என்கிற பாத்ரூம் முருகன் (56). தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கழிவறைகளை டெண்டர் எடுப்பவர் என்பதால் இவர் பாத்ரூம் முருகன் என்று சுற்றுவட்டார பகுதிகளில் அறியப்படுகிறார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபடுவார் என்றும் இவருக்கு சொந்தமாக திண்டுக்கலில் லாட்ஜ் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை நேற்று காரில் கடத்தி சென்றுள்ளனர். பாலமேடு அருகே முருகனை கடத்தி வைத்துள்ளதை போலீசார் ட்ராக் செய்து பிடிக்க முயன்ற போது பாலமேட்டில் இருந்து கோபால்பட்டி வந்து கொண்டிருந்தபோதே இவரை காரில் வைத்து குத்தி கொலை செய்துவிட்டு, தப்பி சென்றுள்ளனர்.

போலீசார் தப்பி சென்றவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்.பி பிரதீப் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட பிரச்னையால் அதே பகுதியை சேர்ந்தவர்களால் பாத்ரூம் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க