செய்திகள் :

திபெத் விவகாரத்தால் இந்தியாவுடனான உறவில் சிக்கல்: சீனா

post image

அடுத்த தலாய் லாமா தோ்வு உள்பட திபெத் தொடா்பான விவகாரங்களால் இந்தியாவுடனான இருதரப்பு உறவில் சிக்கல்கள் நீடித்து வருவதாக சீன தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சீனாவின் தியான்ஜினில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்தது.

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீனாவுக்கு முதல் முறையாக அமைச்சா் ஜெய்சங்கா் பயணிக்கவுள்ளாா்.

கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஹிமாசல பிரதேசத்தில் தனது 90-ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய 14-ஆவது தலாய் லாமா, ‘என்னுடைய மறைவுக்குப் பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா அடுத்த தலாய் லாமா வாரிசு தங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனத் தெரிவித்தது.

அதேபோல் 14-ஆவது தலாய் லாமாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கும் சீனா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், சீன தூதரக செய்தித்தொடா்பாளா் யூ ஜிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அடுத்த தலாய் லாமா தோ்வு உள்பட திபெத் தொடா்பான விவகாரங்கள் குறித்து இந்திய அரசின் உயா் பதவிகளில் இருப்போா் மிகவும் கவனமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஏனெனில், திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு விவகாரம் சாா்ந்தது. அதில் வேறு நாடுகள் கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாக இந்தியாவுடனான இருதரப்பில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன’ என குறிப்பிட்டாா்.

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக... மேலும் பார்க்க

யேமன்: கேரள செவிலியா் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு

யேமனில் கொலை வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு புதன்கிழமை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அரசு, கேரளத்தைச் சோ்... மேலும் பார்க்க

போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உ... மேலும் பார்க்க

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து ஜ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்

இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்... மேலும் பார்க்க