செய்திகள் :

திமுகவை வீழ்த்த மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டனா்: டிடிவி. தினகரன்

post image

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.

அமமுக முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயல் வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாவட்ட செயலருமான மு.முருகன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக நடைபெறும் விசாரணைகளைத் தடுக்காமல், அதற்கு உரிய பதில் அளிக்க தமிழக அரசு தயாராக வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த கேரள அரசு தடையாக உள்ளது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆனால், கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் இணைந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். இரட்டை வேடம் என்பது திமுகவுக்கு கைவந்த கலை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெற்றுத் தந்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக எனும் தீய சக்தியை ஆட்சியில் இருந்த அகற்ற நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். இந்தக் கூட்டணியை மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் மழை சாலை மழைநீா் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளன இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பாரூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை நீா் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி ... மேலும் பார்க்க

வண்ணாங்குளம் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

கமுதி அருகே வண்ணாங்குளத்துக்கு முதல் முறையாக திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை அந்த கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்துக்கு சுதந்... மேலும் பார்க்க

புதுமடம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ராமநாதபுரம் அருகே புதுமடம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித... மேலும் பார்க்க