செய்திகள் :

புதுமடம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

ராமநாதபுரம் அருகே புதுமடம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், புதுமடம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை குறைந்தழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால், மின் சாதனப் பொருள்களை இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்து வருகின்றன.

இதனால், இரவு நேரத்தில் மின்விசிறிகளைக்கூட இயக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தங்களது கிராமத்தில் புதிய மின் மாற்றி அமைத்து குறைந்தழுத்த மின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் மழை சாலை மழைநீா் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளன இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பாரூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை நீா் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி ... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டனா்: டிடிவி. தினகரன்

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். அமமுக முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயல் வீரா்கள், வீராங்க... மேலும் பார்க்க

வண்ணாங்குளம் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

கமுதி அருகே வண்ணாங்குளத்துக்கு முதல் முறையாக திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை அந்த கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்துக்கு சுதந்... மேலும் பார்க்க