செய்திகள் :

`திமுக அமைச்சருக்கு ரூபாய் மாலை; புஸ்ஸிக்கு வெறும் சால்வை' - விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!

post image

மிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். இவர், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். கடந்த 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுமனை புகுவிழாவையும் சிறப்பாக நடத்தினார் பாரதிதாசன்.

இந்த நிகழ்வுக்கு த.வெ.க-வினரை விட தி.மு.க-வினருக்கு அதிகமாக அழைப்புவிடுத்து, அவர்களின் வருகைக்காகவும் காத்திருந்து பாரதிதாசன் உபசரித்தது, பேசுபொருளானது.

பொதுப்பணித்துறை அமைச்சரும் தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு, அவரின் மகனும் தி.மு.க-வின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான கம்பன், திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை உள்பட ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்த பாரதிதாசன்

அரசியல் நாகரிகம் என்றாலும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மயில் இறகு அலங்காரமாலையும், ரூபாய் நோட்டு மாலையும் அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் த.வெ.க மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.

அதோடு நிற்காமல், அமைச்சர் மகன் கம்பனின் காலிலும் விழுந்தது தான் அங்கு கூடியிருந்த த.வெ.க-வின் மற்ற நிர்வாகிகளிடமும், விஜய் ரசிகர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க-வினர் சென்ற பிறகு அங்குவந்த த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு அமைச்சருக்கு வழங்கப்பட்ட மரியாதையைக் காட்டிலும் பாரதிதாசன் குறைவாகத்தான் வழங்கினார் என்கிற பாகுபாட்டையும் பார்த்து த.வெ.க நிர்வாகிகள் கொதித்துப்போனார்கள்.

அதாவது, புஸ்ஸி ஆனந்துக்கு வெறும் சால்வை மட்டுமே அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆனாலும், புஸ்ஸி ஆனந்த் த.வெ.க கொடியை மாலையாக அணிவித்து பாரதிதாசனையும், அவரின் மனைவியையும் ஆசீர்வாதம் செய்தார்.

`அரசியல் களத்தில் த.வெ.க-வுக்கு முதல் எதிரி தி.மு.க தான்’ என்று அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைக்கிறார். ஆனால், அவர் கட்சி மாவட்டச் செயலாளர் ஒருவர் தி.மு.க-வின் அமைச்சருக்கு முதல் மரியாதை அளித்து, அவரின் வருகைக்கு முக்கியத்துவம் வழங்கி ஆர்வம் காட்டியிருப்பது கட்சிக்குள் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு த.வெ.க மாவட்டச் செயலாளர் பாரதிதாசன் தன்னிலை விளக்கமொன்றையும் விஜய்க்கு கடிதம் மூலமாக அனுப்பியிருக்கிறார். அதில், ``எனது புதிய இல்ல புதுமனை விழாவுக்கு நம் கழக சொந்தங்கள் அனைவரையும் அழைத்தேன்.

மன்னிப்பு கடிதம்

அதேபோன்று, எனது குடும்ப நண்பரான மாற்றுக் கட்சி அமைச்சர் அவர்களையும் அழைத்தேன். குடும்ப நண்பர் என்பதால், அவரை மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்துவிட்டேன். இச்செயலுக்காக நான் மிகவும் மனம் வருந்தி தலைவர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில், என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்களை தவிர வேறு எந்த ஒரு மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். தலைவர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கழகத்துக்கு உண்மையாக செயல்படுவேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் பாரதிதாசன்.

``எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' - செல்லூர் ராஜூ

மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தால் அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின... மேலும் பார்க்க

அமெரிக்க இராணுவ விழா: ``பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு..'' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழா ஜூன் 14 சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிறந்தநாளுடன் இணைந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வாஷிங்டனில் ஒரு பெரிய அளவிலான விழா, அணிவகுப்புடன் நட... மேலும் பார்க்க

மா.செ.கூட்டத்தில் அன்புமணி; `மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்' - யூ-டர்ன் போடும் ராமதாஸ்!

நேற்று செய்தியாளரை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், '2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்' என்று கூறியிருந்தார். ஆனால், இன்று நடந்த செய்தியாளர் சந்... மேலும் பார்க்க

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க