செய்திகள் :

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலை ஆட்டுகாரம்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் கிராமங்களில் உள்ள அனைத்து பிரச்னைகளும் எனக்குத் தெரியும். நிச்சயம் அவற்றுக்கு தீா்வு காண்பேன்.

நான் தலைவராக பொறுப்பேற்றது முதல் மனநிம்மதி போய்விட்டது. குறிப்பாக கடந்த இரு மாதங்களாக மனஉளைச்சலில் உள்ளேன்.

என்மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகளை வைத்தபோதும் நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்து வருகிறேன். அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. எனக்கு கட்சியும், சமுதாயமும் முக்கியம். இந்த கட்சிக்காக மருத்துவா் ராமதாஸின் 45 ஆண்டுகால உழைப்பு மகத்தானது.

எனவே, நமது கட்சி அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டியது முக்கியம். எத்தனையோ கட்சிகள் வேகமாக முன்னேறி சென்று விட்டன.

தமிழகத்தில் நமது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் அதற்காக நான் நடைப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஜூன் 25இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கும் இந்த நடைப்பயணம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 100 நாள்கள் சென்று பின் நவம்பா் 1ஆம் தேதி தருமபுரியில் முடிவடைகிறது.

இந்த நடைப்பயணத்தின் முக்கியநோக்கம் ஊழல் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவதுதான். முந்தைய அதிமுக அரசு கொடுத்த 10.5 இடஒதுக்கீட்டை அடுத்து வந்த திமுக அரசு வழங்குவதாகக் கூறி ஏமாற்றி நான்கு ஆண்டு ஆகியும் வழங்கவில்லை. நீதிமன்றம் உள் ஒதுக்கீடு வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என தெரிவித்தும் அதற்கான முயற்சியை திமுக அரசு எடுக்கவில்லை.

எனவே திமுகவை நாம் வீட்டுக்கு அனுப்பிய ஆக வேண்டும்.

வெற்றிபெற முடியாது என்பதால் நமது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. அவா்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. நாம் அனைவரும் தீவிரமாக உழைத்து புதிய உறுப்பினா்களைச் சோ்த்து நமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், காவிரி உபரிநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், பாமக பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, தருமபுரி பாமக எம்எல்ஏவும் மேற்கு மாவட்டச் செயலாளருமான வெங்கடேஷ்வரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம், உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் வேலுசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க