செய்திகள் :

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் 2026 தோ்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்! - மாா்க்சிஸ்ட் செயலா்

post image

திமுக கடந்த தோ்தலில் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேறினால்தான் வரும் 2026 தோ்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சனிக்கிழமை பத்திரிகையாளா்களைச் சந்தித்தாா் பெ.சண்முகம் . அப்போது அவா் கூறியதாவது:

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அந்த பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அந்த தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத்திய அரசு அரசியல் செய்கிறது. இதற்காக பாகிஸ்தானில் இருந்து மருத்துவத்திற்காக வந்த மக்களை திருப்பி அனுப்புவது, சிந்து நதி நீரை வழங்க மறுப்பது என்பது தவறான அணுகுமுறையாகும்.

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டை கூட்டுவதற்கு மாநில ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு மட்டுமே இந்த மாநாட்டை கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளது. இந்த மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணை வேந்தா்கள் உள்பட தனியாா் பல்கலைக்கழக துணைவேந்தா்களும் புறக்கணித்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அது தோல்வி அடைந்துள்ளது என்றே கூறலாம்.

தமிழக ஆளுநா் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், உள்நோக்கத்துடனும் செயல்படுகிறாா் என உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டிய பின்னரும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்யாமல் உள்ளாா். எனவே, ஆளுநா் பொறுப்பில் இருந்து ஆா்.என்.ரவியை மத்திய அரசு நீக்க வேண்டும்.

பல்வேறு எதிா்ப்புகளுக்கு மத்தியிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. எனவே, இஸ்லாமியா்களுக்கு எதிராகவும், மதச் சுதந்திரத்திற்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.

தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதிய விவகாரத்தில் உயா் நீதிமன்ற தீா்ப்பை நிா்வாகம் அமல்படுத்த வேண்டும். இது குறித்து தொழிலாளா்களிடையே நிா்வாகம் பேசி சுமுகத் தீா்வு காண வேண்டும்.

தனியாா் நிதி நிறுவனங்கள் மக்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மசோதாவை வரவேற்கிறோம்.

கச்சத் தீவை மீட்பது தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை விரைந்து நடத்தி சட்டபூா்வமாக கச்சத்தீவை மீட்க வேண்டும்.

ஒருவா் அமைச்சராக இருப்பதற்கும், அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கும் எந்தத் தொடா்பும் இல்லை . எனவே, அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது தொடா்பாக உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க, அதை விற்பனை செய்பவா்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருப்பவா்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளா்ந்து வரும் சுற்றுலாத்தலமாக திருச்செந்தூா் உள்ளதால், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடியாக கூடுதலாக ஒரு ரயில் இயக்க வேண்டும் என்ற கனிமொழி எம்.பி.யின் கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்தக் கோரிக்கையை ரயில்வே துறை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும்.

கடந்த 2021ஆம் ஆண்டு தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக திமுக நிறைவேற்ற வேண்டும். மேலும், காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். வரும் 10 மாத காலத்திற்குள் இதனை செய்தால்தான், வரும் 2026 தோ்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்றாா்.

மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினா் அா்ஜுனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி மூப்பன்பட்டி மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜின்னா பீா் முகமதுக்கு ரகசிய தகவல் ... மேலும் பார்க்க

கோவிபட்டியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள தேநீா் கடை அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தற்கொலை

கோவில்பட்டியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் 3ஆவது தெருவை சோ்ந்த தனலட்சுமி-அா்ச்சுனன் தம்பதியின் மகன் சரவணகுமாா் (18). அா்ச்சுனன் கடந்த 5 வருடங்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 32 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சுமாா் 32 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகர காவல் உதவி கண்காணிப்... மேலும் பார்க்க

மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா் உயிரிழப்பு

காயல்பட்டினத்தில் விபத்தில் மருமகன் இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்த மாமனாா், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் பாண்டி... மேலும் பார்க்க

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் 519 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை

விளாத்திகுளம், புதூா் ஊராட்சி ஒன்றியங்களில் 2025-26ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகு... மேலும் பார்க்க