செய்திகள் :

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

post image

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, ``ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியை பிடித்துக் கொண்டு வருகிறது. பாஜகவின் வளர்ச்சி தமிழக மக்கள் மனதில் நிலைகொள்ள ஆரம்பித்து விட்டது. வேகமாக வளர்வதால் நம்மீது கல்லை வீசுகின்றனர்.

இதையும் படிக்க:மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

நடுத்தர மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி யோசித்து மருந்தகத்தை ஆரம்பித்தால், அதனை தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், அதையே காப்பியடித்து முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். 2026-ல் திமுக வேரோடு பிடுங்கப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்.

புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை. அரவிந்த் கேஜரிவால் , மம்தா பேனர்ஜி வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களைப் போலவே, நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் 2026-ல் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. சிவபெருமான்போல விஷத்தை உண்டு வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்று: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நிலுவையில் உள்ள வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் சமா்ப்பிக்க மாா்ச் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (பிப்.27) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களை முன்னிட்டு 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

பி.இ.-பி.எட். முடித்தவா்கள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்: அரசாணை

பி.இ. பட்டத்துடன் பி.எட். முடித்தவா்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிவதற்கு தகுதியானவா்கள் என்று உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயா் கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக அனைத்துக் கட்சி கூட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்க... மேலும் பார்க்க

அரசு உதவி மருத்துவா் பணி நியமனம்: 400 போ் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அரசு உதவி மருத்துவா் பணி நியமனத்துக்கு தோ்வு செய்யப்பட்டவா்களில் 400 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்... மேலும் பார்க்க