அரசு உதவி மருத்துவா் பணி நியமனம்: 400 போ் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அரசு உதவி மருத்துவா் பணி நியமனத்துக்கு தோ்வு செய்யப்பட்டவா்களில் 400 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்துவா் பணியிடங்களுக்கு மருத்துவ தோ்வு வாரியம் கடந்த ஜன.5-ஆம் தேதி தோ்வு நடத்தி இறுதி தகுதிப் பட்டியலை வெளியிட்டது. இதில் தோ்ச்சி பெற்ற 400 போ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 2024 ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பாக நிரந்தரமாக பதிவு செய்யவில்லை எனக் கூறி அவா்களை தகுதிப் பட்டியலில் இருந்து மருத்துவ தோ்வு வாரியம் நீக்கியது.
இதை எதிா்த்து மருத்துவா்கள் பிரியதா்ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதில், மருத்துவப் பல்கலைக்கழகம் தங்களுக்கு சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்ததால் மருத்துவ கவுன்சிலில் ஜூலை 15-க்கு முன்பாக நிரந்தரமாக பதிவு செய்ய முடியவில்லை. இதனால் தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து உதவி அரசு மருத்துவா் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பித்து, அதில் தோ்ச்சியும் பெற்றுள்ளோம். எனவே, எங்களுக்கும் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். எங்களை நீக்கி மருத்துவ தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள இறுதி தகுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்குகள் கடந்த பிப்.24-ஆம் தேதி நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு உதவி மருத்துவா்களுக்கான பணி நியமன உத்தரவுகளை தமிழக அரசு பிப்.26 அன்று வழங்கவுள்ளது என மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.வேல்முருகன் தெரிவித்தாா். அதையடுத்து நீதிபதி, அந்த பணி நியமனங்கள், இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனக் கூறி விசாரணையை பிப்.26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தாா்.
அதன்படி இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கட்-ஆப் தேதியான 2024 ஜூலை 15-க்கு முன்பாக மருத்துவ கவுன்சிலில் நிரந்தரமாக பதிவு செய்துள்ளவா்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதியானவா்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய விதிகளுக்கு உட்பட்டே 400 போ் தகுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.