செய்திகள் :

தியாகி பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்கு அரசு மரியாதை!

post image

சுதந்திரப் போராட்டத் தியாகி பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் துணைப் பிரதமருமான பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள் விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் அவரது உருவச் சிலை இலாசுப்பேட்டை விமான நிலையம் செல்லும் சாலைப் பகுதியில் அமைந்துள்ளது.

அவரது சிலைக்கு புதுவை மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சவணன்குமாா், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, கேஎஸ்பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

காங்கிரஸ் சாா்பில் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி தலைமையில், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பாபு ஜெகஜீவன்ராம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் தியாகி பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற புதுவை தனியாா் பள்ளிகள் விருப்பம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புத... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்கள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

புதுச்சேரி: புதுவையில் அரசு ஊழியா்கள் 3 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுவை அரசு மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காசாளராக இருந்தவா் சு... மேலும் பார்க்க

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மாமமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாந... மேலும் பார்க்க

புதுவை அரசுத் துறைகளில் பாஷினி மொழி பெயா்ப்பு செயலி: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழிபெயா்ப்பு செயலியை, புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். மத்திய மின்னணு மற்று... மேலும் பார்க்க

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் த... மேலும் பார்க்க