செய்திகள் :

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்! யார் இந்த பினாகி மிஸ்ரா?

post image

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து 2 ஆவது முறையாக மக்களவை உறுப்பினராக இருப்பவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா.

முன்னதாக நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் 2023-ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2024 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மஹுவா மொய்த்ரா(50), கடந்த மே 30 ஆம் தேதி ஜெர்மனியில் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ரா(65)வை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் திருமணம் குறித்த தகவல்கள் வெளியே வந்துள்ளன.

இவர் ஏற்கனவே டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் 3 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பினாகி மிஸ்ரா, ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் புரி தொகுதியில் (2009-2019) மக்களவை எம்.பி.யாக இருந்தவர். 1996ல் காங்கிரஸ் சார்பில் இதே புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 3 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

இவர் சங்கீதா மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! பாதுகாப்பு அதிகரிப்பு!!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க