செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் 53 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

post image

பிரயக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 53 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா, உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகின்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி உள்ளிட்ட முக்கிய ஆறு நாள்களில் திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். இந்த நிலையில் கும்பமேளா நிறைவடைய 9 நாள்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதுவரை சுமார் 53 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் முதன் முறையாக நாட்டின் நம்பிக்கைக்கு மரியாதை கிடைத்துள்ளது. 500 ஆண்டுக்கால காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி. 2016-17ஆம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக அரசு இல்லாதபோது, அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2.35 லட்சமாக இருந்தது ஆனால், 2024ல் இந்த எண்ணிக்கை 14 முதல் 15 கோடிக்கு உயர்ந்துள்ளது

36வது நாளை தொடர்ந்தும் இன்றும் திரிவேணி சங்கமத்தில் நீராடப் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். பிராயக்ராஜ் ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிவதால் அதிகப்படியான கூட்டத்தை நிர்வகிக்க காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் ஜெனரல் ஜி.பி. சிங், பிரயாகராஜின் மகாகும்பமேளாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார், உத்தரப் பிரதேச காவல்துறை, சி.ஆர்.பி.எஃப் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பதை அவர் பாராட்டினார்.

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், மகாகும்பமேளாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மகாகும்பமேளா சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், சனிக்கிழமை புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பிரயாக்ராஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்குவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க