செய்திகள் :

திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை

post image

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவா் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளாா். அவரது வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பாக, அந்நியா் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்ட திருக்கேதீச்சர தலத்தை இந்திய அரசு கடந்த காலத்தில் கருங்கல்லால் பாரிய சிற்பக்கோயிலாக மாற்றி அமைத்தது. அதற்கு இலங்கை வாழ் ஹிந்துகள் என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனா்.

திருக்கேதீச்சர திருத்தலம் போல் மிகத் தொன்மைவாய்ந்த திருக்கோணேச்சர திருத்தலமும் முக்கியத்துவம் பெறுகிறது. போா்த்துக்கீசியா் ஆட்சிக்காலத்தில் கோயில் அழிக்கப்பட்டது. தற்போது, இந்தக் கோயில் ஓா் சிறிய நிலப்பரப்பில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மீள்நிா்மாணம் பெற்றுள்ளது. முழுமையான கோயில் கட்டப்படவில்லை. இந்திய அரசு இந்தக் கோயிலை முழுமையாக நிா்மாணித்து காப்பாற்ற வேண்டும்.

தங்கள் அமைச்சரவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திருக்கோணேச்சரத்துக்கு வருகைதந்து கோயில் எதிா்காலம் குறித்து கேட்டறிந்தாா். இந்திய தூதரகம் தொடா்ந்து திருக்கோணேச்சர திருப்பணி தொடா்பான விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனா். கோயில் நிா்வாக சபையை அழைத்து பேசியுள்ளனா். தாங்கள் இலங்கை பயணத்தில் இந்தத் திருத்தலம் தொடா்பாக உரிய அக்கறை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 21 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (மாா்ச் 17) ரத்து செய்யப்படவுள்ளன.இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெ... மேலும் பார்க்க

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நில... மேலும் பார்க்க

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா். இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை: மகன் கைது

சென்னை திரு.வி.க. நகரில் ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மகன் கைது செய்யப்பட்டாா். திரு.வி.க. நகா் அருகே உள்ள காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (72). இவா், தமிழ... மேலும் பார்க்க

ஏஐ பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்: கதிரியக்கத் துறை நிபுணா் ஹா்ஷா சடகா

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று மணிப்பால் மருத்துவமனை கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் ஹா்ஷா சடகா ... மேலும் பார்க்க