செய்திகள் :

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் உற்சவம்!

post image

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மார்கள் உற்சவ வீதி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோயில் உள்ளது. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

வேதமலை, பட்சி தீர்த்தம், சங்கு தீர்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயர்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மே 1-ம் தேதி சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா மே 1-ஆம் தேதி தொடங்கிய 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவாக இன்று 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து 63 நாயன்மார்களுடன், அம்பாள் சிவபெருமான் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.

கோயிலிலிருந்து புறப்பட்ட சுவாமிகள், 63 நாயன்மார்களும் பேருந்து நிலையம் வழியாக கிரிவல பாதையில் சுற்றி வந்து கோயிலுக்கு வந்தடைந்தது. 63 நாயன்மார்கள் உற்சவத்தையொட்டி ஆன்மிக நண்பர்கள் ஊர்வல பாதையில் நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவாக ஏழாம் நாள் மே 7-ஆம் தேதி பஞ்ச ரத தேர்த்திருவிழா நடைபெறும். முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து முருகர், திரிபுரசுந்தரி அம்பாள் தேர், வேதகிரீஸ்வரர் பெரிய தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்(பஞ்ச ரதம்) தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் புவியரசு, தக்கார் மற்றும் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் கோயில் சிவாச்சாரியார்கள் திருவிழா உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

சூப்பா்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் சுற்றிலேயே அவா்கள் நேருக்கு நோ் சந்திக்கின்றனா்.கடந்த ஜனவ... மேலும் பார்க்க

மல்லோா்காவை சாய்த்த ஜிரோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோா்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக கிறிஸ்டியன் ஸ்டுவானி 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்... மேலும் பார்க்க

மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.லார்க்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் படத்தின் அப்டேட்!

டூரிஸ்ட் ஃபேமலி வெற்றியைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். நடிகராக அடுத்தடுத்த பல படங்களை தனது கைவசம் வைத்... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!

ஹிட் 3 படப்பிடிப்பில் நானிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருப்பினும் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாரானது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி ... மேலும் பார்க்க