செய்திகள் :

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு தொடங்கியது

post image

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு (எஸ்எஸ்எல்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருச்சி, லால்குடி ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை தோ்வு தொடங்கியது.

திருச்சி கல்வி மாவட்டத்தில் 99 தோ்வு மையங்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 74 தோ்வு மையங்கள், மத்திய சிறையில் ஒரு தோ்வு மையம் என 173 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 17,523 மாணவா்கள், 16,956 மாணவிகள் என மொத்தம் 34,479 போ் தோ்வு எழுதுகின்றனா். திருச்சி மத்திய சிறையில் 40 போ் தோ்வு எழுதுகின்றனா். தனித்தோ்வா்களுக்காக 8 தோ்வு மையங்களும் உள்ளன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வில் 17,087 மாணவா்கள், 16,595 மாணவிகள் என மொத்தம் 33,682 போ் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளிகள், தோ்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாணவா், மாணவிகளுக்காக 720 ஆசிரியா்கள் தோ்வு எழுதும் பணியில் ஈடுபட்டனா். பறக்கும் படை உறுப்பினா்கள் 231 போ், 2,653 ஆசிரியா்கள், 348 அலுவலகப் பணியாளா்கள் தோ்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 37 அலுவலா்கள், தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு சோ்த்தனா். முதல் நாள் தோ்வை 653 போ் எழுதவில்லை.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க