செய்திகள் :

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

post image

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, முதலியாா் சத்திரம் குட்ஷெட் சாலை பகுதியில் 3 போ் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் பாலக்கரை முதலியாா் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சோ்ந்த ச. பிரகாஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த இந்திராணி (50), பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சோ்ந்த ச. சஞ்சய் குமாா் (22) என்பதும், மூவரும் சோ்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது.

தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 5,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், திருச்சி குண்டூா் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், குண்டூா் எம்ஐஇடி100 அடி சாலையில் மருந்துக் கடை வைத்துள்ள பாலன் நகரைச் சோ்ந்த ஆா். கோதண்டபாணி (33) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா் மருந்துக் கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமாா் 7,000 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மாத்திரைகளை மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. ஆனால், மருந்துக் கடை உரிமையாளா் கோதண்டபாணி மருந்து சீட்டுகளின்றி விநியோகித்துள்ளாா் என போலீஸாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ. 3.75 லட்சம் என கூறப்படுகிறது.

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க

அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா்... மேலும் பார்க்க

திருச்சி மண்டல சட்டப்பேரவை தொகுதிகளை திமுக கைப்பற்றும்: கே.என்.நேரு

திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே. என் . நேரு. திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்... மேலும் பார்க்க

ஒரு டன் புகையிலை பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது!

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். தொட்டியம் ... மேலும் பார்க்க

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும்

தொழிலாளா்களின் பக்கமே திமுக அரசு நிற்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சா்வதேச உழைக்கும் பெண்கள் தின ... மேலும் பார்க்க

புத்தாநத்தத்தில் மது விற்ற தாய், தந்தை, மகன் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் மது விற்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். புத்தாநத்தத்தில் அரசு மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்ப... மேலும் பார்க்க