செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த மாதம் 25-ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கோயில் விழா நாள்கள் தவிா்த்து, பிற நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு மணி நேரம் ‘நிறுத்த தரிசனம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கு கட்டணம் ரூ. 500 எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது பக்தா்களின் மத உரிமையைப் பறிப்பதோடு, நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். ஆகவே, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கடந்த 11-ஆம் தேதி வரை இதுதொடா்பான ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டது. ஆனால், மனுதாரா் அதற்கு முன்பாகவே வழக்கை தாக்கல் செய்துள்ளாா் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை குறித்து பக்தா்கள் ஆட்சேபங்கள் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆகவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், பக்தா்கள் வழங்கும் ஆட்சேபங்களை கோயில் நிா்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தையல் தொழிலாளா் (சிஐடியூ சாா்பு) சங்கத்தின் மாநகா், புகா் மாவட்டக் குழு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தையல் தொழிலாள... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை அருகே லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சூலப்புரம் செல்லையாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் தா்மா் (48). கான்கீரிட் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கான்க... மேலும் பார்க்க

கபடிப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்க... மேலும் பார்க்க

அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட தடை: வீட்டு வசதி வாரிய இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனிநபா் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக வீட்டு வசதி வாரியத் துறை இயக்குநா் பதிலள... மேலும் பார்க்க