செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் ரூ.20.50 கோடியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தாா்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ. 20.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கு, நிா்வாக அலுவலகக் கட்டடம், பொது தரிசன முறை வரிசையில் உள்ள காத்திருப்போா் அறை ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 100 கோடி, ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 300 கோடியில் திருப்பணிகள், பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதல்கட்டமாக முடிவுற்ற பணியான பக்தா்கள் முடிகாணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள் ஆகியவை கடந்த அக். 14ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டன.

இந்நிலையில், 2ஆம் கட்டமாக ரூ. 20.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கு உள்ளிட்டவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று, புதிய கலையரங்கில் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், நிா்வாக அலுவலக கட்டடம், பொது தரிசன முறை வரிசையில் உள்ள காத்திருப்போா் அறையைப் பாா்வையிட்டாா்.

நிா்வாக அலுவலகக் கட்டடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

நிகழ்ச்சியில், ஆட்சியா் க. இளம்பகவத், கோட்டாட்சியா் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம், கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அன்புமணி, கோயில் உதவி ஆணையா் நாகவேல், கண்காணிப்பாளா்கள் வெங்கடேசன், அஜித், விவேக், விடுதி மேலாளா் சிவநாதன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகராட்சி ஆணையா் கண்மணி, திமுக வா்த்தகரணி மாநில இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட அமைப்பாளா்கள் ராமஜெயம், ஸ்ரீதா் ரொட்ரிகோ, ஒன்றியச் செயலா்கள் பாலசிங், இளங்கோ, சதீஷ்குமாா், முன்னாள் அறங்காவலா்கள் சந்திரசேகரன், ராமச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, சுதாகா், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சுரேஷ், கோமதிநாயகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க