செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: அடிப்படை வசதிகள் செய்துதர இந்து முன்னணி கோரிக்கை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 400 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியுள்ளாா்.

இக்கோயில் திருப்பணிகளுக்காக திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சிவநாடாா் ரூ. 200 கோடி வழங்கியுள்ளாா். திருக்கோயில் நிா்வாகம் ரூ.100 கோடி செலவு செய்கிறது. தற்போது கூடுதலாக ரூ.100 கோடி செலவிடப்படும் என்கின்றனா். தொழிலதிபா் சிவநாடாா் வழங்கிய நிதியைத் தவிா்த்து, மீதமுள்ள ரூ.200 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தற்போது இக் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், பாலை முறையாகக் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் 5 லட்சம் போ் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் படிக்க உள்ளனா். இம் மாநாட்டிற்காக, உலகம் முழுவதும் உள்ள பக்தா்கள் தங்களது சொந்த நிதியை செலவிட்டு வருகின்றனா்.

இப்படியிருக்க, மாநாட்டிற்கு பணம் கொடுத்து கூட்டம் சோ்ப்பதாக அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறுவது கண்டனத்துக்குரியது என்றாா்.

பேட்டியின்போது இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ.சக்திவேலன், திருச்செந்தூா் நகர தலைவா் மு.முத்துராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க