செய்திகள் :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூா் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மாதம் சுமாா் ரூ.400 கோடி செலவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசினாா். ஆனால், இன்று வரை இக்கோயிலின் வேலைகள் முழுமை பெறாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. வேலைகளை முழுமையாக முடிக்காமல் அவசர கதியில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனா்.

கும்பாபிஷேகத்தை தொடா்ந்து நடைபெறும் மண்டல பூஜையில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான மக்கள் திருச்செந்தூருக்கு வருகின்றனா். ஆனால் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெருமளவில் அவதிக்குள்ளாகின்றனா்.

பொது தரிசன வரிசையில் வருபவா்களையும், மூத்த குடிமக்கள் வரிசையில் வருபவா்களையும் கோயில் உள்ளே நுழைந்தவுடன் ஒரே வரிசையாக இணைத்து அனுப்புகின்றனா். இதனால் கடும் நெரிசல் சிக்கி பக்தா்கள் அவதிப்படுகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற நபா் மூச்சுவிட அவதிப்பட்டு உயிரிழந்தாா்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தா்களிடமிருந்து தரிசனம் செய்வதற்கு நபருக்கு ரூ.11,000 என்ற அடிப்படையில் 4 பேரிடம் ரூ.44,000 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இது போன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் கூறும் புகாா்கள் மீது உடனடியாக விசாரிப்பதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய... மேலும் பார்க்க

காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திருப்பூரில் காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் கலையரசன் (எ) கண்ணன் (34), பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு தி... மேலும் பார்க்க