பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
திருட்டு வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் நகை, பணம் திருடிய வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா் குமரானந்தபுரம் பாபுஜி நகா் பகுதியைச் சோ்ந்த சரண்யா, இவா் தனது மாமியாரை கவனிப்பதற்காக நாமக்கல்லைச் சோ்ந்த கெளசல்யா (35) என்பவரை வேலைக்கு வைத்திருந்தாா். இந்த நிலையில், 2017 டிசம்பா் 30-ஆம் தேதி இரவு கெளசல்யா தான் வேலை செய்த வீட்டில் இருந்து 3 பவுன் நகை, ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கெளசல்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் நீதித் துறை நடுவா் மன்றம் எண் 1-இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி செந்தில்ராஜா தீா்ப்பு வழங்கினாா். இதில், கெளசல்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.