3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கிய...
திருத்துவபுரத்தில் பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
மாா்த்தாண்டம் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், களியக்காவிளை அருகே திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாா்த்தாண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் மேற்பாா்வையில் ‘விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்குவோம்’ என்ற நோக்கில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
தலைமையாசிரியா் ஜோசப் சேவியா் தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் செல்லசுவாமி பங்கேற்று மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
18 வயதுக்குக் குறைவானோா் வாகனம் ஓட்டக் கூடாது என்றும், மீறி ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம் என மாணவா்கள் உறுதிமொழியேற்றனா்.