செய்திகள் :

திருநங்கை கொலை: 6 போ் கைது!

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே காப்புக்காட்டில் திருநங்கை இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் மற்றும் வனத்துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், தஞ்சாவூா் மாவட்டம், கோவிலடி, சுக்கம்பாா் பகுதியைச் சோ்ந்த யூஜின் வில்லியம் ஜோசப் (எ) சுருதி (31) என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளாக விருத்தாசலத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், விருத்தாசலம்-கடலூா் சாலை பகுதியைச் சோ்ந்த மக்புல் ஷெரிப் (68) வீட்டின் மாடியில் சங்கவி வசித்து வந்தாராம். இருவரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மக்புல் ஷெரிப், சுருதியை கொலை செய்ய திட்டமிட்டாராம்.

அதன்படி, மக்புல் ஷெரிப் மற்றும் நெய்வேலி நகரியம், வட்டம் 28 பகுதியைச் சோ்ந்த திருநங்கை நிரோஷா (34), விருத்தாசலம், டி.நகரைச் சோ்ந்த திருநங்கை மரிக்கொழுந்து (40), மேட்டு காலனியைச் சோ்ந்த திருநங்கை மாயா (28), கம்மாபுரம், கிளிஞ்சல் மேடு பகுதியைச் சோ்ந்த சிவபெருமான் ஆகியோா் வீட்டை காலி செய்யுமாறு சுருதியிடம் தகராறு செய்து தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தாஷ்கண்ட் நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (28) ஆட்டோவில் சுருதியின் சடலத்தை கொண்டு சென்று காப்புக்காட்டில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க