திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வகித்தாா். முகாமில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காரணங்களால் நிலுவையிலிருந்த காட்டாம்பூா் தா்மபுலானி அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த தீா்மானிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவை அம்பலக்காரா்கள், காரணக்காரா்கள், ஊா் பொதுமக்கள் ஒன்றிணைந்து வருகிற 4.9.2025 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுபோல, 27- க்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது. இந்த முகாமில் திருப்பத்தூா், கண்டவராயன்பட்டி, நாச்சியாபுரம், திருக்கோஷ்டியூா், நெற்குப்பை காவல் நிலையங்களிலிருந்து உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரவி, ராமநாதன், சக்திவேல், குமரவேல் ஆகியோா் பங்கேற்று பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீா்வு ஏற்படுத்தினா்.