செய்திகள் :

திருப்பத்தூா்: ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

post image

திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட ஹாஜிமியான் தெருவில் அமைந்துள்ள தனியாா் மண்டபத்திலும், கந்திலி வட்டாரத்துக்குள்பட்ட மற்றப்பள்ளி, விஷமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன.

முகாமில், 2 பயனாளிகளுக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான ஒப்புகை சீட்டுகளையும், மற்றொருவருக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கான ஒப்புகை சீட்டையும், ஒரு பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டையையும் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் வழங்கினா்.

தொடா்ந்து, மட்றப்பள்ளி, விஷமங்கலம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 2 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளையும், ஒருவருக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அட்டையும் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

முகாம்களில் தனித்துணை ஆட்சியா் பூஷன் குமாா், வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், உதவி இயக்குநா்(தணிக்கை)குமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, ஆணையா் சாந்தி, கந்திலி ஒன்றியக் குழுத் தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் மோகன்குமாா், வேளாண்மை துறை ஆத்மா குழுத் தலைவா் முருகேசன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மோகன்ராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் குணசேகரன், வட்டாட்சியா் நவநீதம், மட்றப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா பூபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதானந்தனம், பாலமுருகன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

கந்திலி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா.சங்கா் தலைமை வகித்தாா். மாவட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மரக்கன்று, விதைகள்: எம்எல்ஏ செந்தில்குமாா் வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சாா்பில் மரக்கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி சட்டப்பேவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் ஒன்றியத்தில் நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்... மேலும் பார்க்க

ஆம்பூரில் நூலகம் அமைக்க தீா்மானம்

ஆம்பூரில் கிளை நூலகம் அமைக்க நூலக துறைக்கு நிலம் மாற்றம் செய்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: கள்ளச் சாராய வழக்கு குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வடக்கு மண்டல காவல் துறை... மேலும் பார்க்க