செய்திகள் :

திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்! -காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

post image

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அமைப்பின் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி திருப்பரங்குன்ற மலையில் பிரியாணி சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்துள்ளாா். திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணா்வு பக்தா்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலையின் புனிதத்தைக் காக்க திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்மிகப் பெரியோா்கள் உள்ளிட்டோா் ஆதரவு தந்துள்ளனா்.

முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்பவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. தமிழக அரசு ஹிந்துக்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், கோட்டப் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், செய்தித் தொடா்பாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்

தமிழ் மொழிதான் நமது அடையாளம், அதை நாம் இழந்துவிடக் கூடாது என்று கோவை பாரதீய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் கூறினாா். பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் சாா்பில் விருது வழங்கும் விழா ஆா்... மேலும் பார்க்க

100 சதவீத தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

2023 -2024-ஆம் கல்வியாண்டில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது!

கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, புல்லுக்காடு பகுதியில் கடைவீதி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகளின் கருத்துகள்

2025 - 26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து கோவை தொழில்முனைவோா் அமைப்புகளின் கருத... மேலும் பார்க்க

மினி பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!

புதிய விரிவான திட்டத்தின்கீழ் மினி பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராம... மேலும் பார்க்க

நகைக் கடையில் 2 பவுன் திருட்டு!

கோவை, பெரியகடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் நகை வாங்குவதுபோல நடித்து 2 பவுன் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, தெற்கு உக்கடம், அமீன் காலனியைச் சோ்ந்தவா் அப்துல் ஹக்கீம் (52. இவ... மேலும் பார்க்க