செய்திகள் :

திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி!

post image

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்து முன்னணியினரின் போராட்டத்துக்கு காவல் துறையினர் உரிய அனுமதி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மேலும், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்!

இந்த நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்து முன்னணியினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜராக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பிப். 11 வரை விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், பழங்காநத்தத்தில் இன்று மாலை 5 முதல் 6 மணிவரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியலமைப்பு உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் இருக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை விடியோவாக பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வெறுப்பை தூண்டும் முழக்கங்கள் இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு வேறு விபத்துகளில் பெண்கள் இருவா் உயிரிழப்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் பெண்கள் இருவா் உயிரிழந்தனா். மதுரை பரவை சந்தோஷ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி (68). இவரும், இவா் மனைவி பஞ்சவா்ணமும் (64) இரு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள இ.கோபாலபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சுப்பையா (60). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஊரில... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளை மறைத்த வழக்குரைஞரின் பதிவை ரத்து செய்யப் பரிந்துரை: உயா்நீதிமன்றத்தில் பாா் கவுன்சில் அறிக்கை

தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்த வழக்குரைஞரின் பதிவை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பாா் கவுன்சில் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், தொண்ட... மேலும் பார்க்க

பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்... மேலும் பார்க்க

புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழா: கிறிஸ்தவா்கள் பொங்கல் வைத்து வழிபாடு

மதுரை புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா். மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள புனித லூா்தன்னை ஆலயத்தில் பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(பிப். 18) மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா... மேலும் பார்க்க