செய்திகள் :

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: மாநகரக் காவல் துறை!

post image

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொண்டது.

இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக, கடந்த சில நாள்களாக இரு வேறு பிரிவினா் இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து, இரு பிரிவினா்களைச் சோ்ந்தவா்கள் மீது திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்விலும் திருப்பரங்குன் மலை தொடா்பாக இரு பிரிவினரின் சாா்பாக 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை(பிப். 4) ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட விவரம் தெரிந்தும், கட்செவில் அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும், தண்டோராக்கள் போட்டும் பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் இந்து முன்னணி அமைப்பினா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், மதுரை மாநகரக்காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக , இந்து முன்னணி திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம். எச்சரிக்கையை மீறி வருபவா்கள் மீதும், அவா்களது வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்தோரின் விவரங்கள் அரசு மருத்துவமனை பதிவேட்டில் இல்லை! -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்த ஆதரவற்றோரின் பெயா், விவரங்கள் பதிவேட்டில் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. மதுரை ... மேலும் பார்க்க

தீப்பற்றி வீடு சேதம்: அமைச்சா் ஆறுதல்

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ. முக்குளத்தில் சூரிய மின் தகடு பேட்டரியால் தீப்பற்றியதில் சேதமைடந்த வீட்டை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். அ.முக்கு... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் தற்கொலை

மதுரை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை அருகேயுள்ள நாகமலைப் புதுக்கோட்டை பிஎல்ஜி நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்கழுவன் மகன் ஜவஹா் (59). இவா் செட்டிகுளம்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் பிரச்னைகளை களைய நிா்வாகத் தீா்ப்பாயம்! தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை!

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியா்களின் பிரச்னைகளைக் களைய உடனடியாக நிா்வாகத் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மதுரை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி

மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை அருகேயுள்ள விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (35). இவா்... மேலும் பார்க்க

முதியவா் கொலை: இருவா் கைது

தே.கல்லுப்பட்டி அருகே முன்விரோதத் தகராறில் முதியவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள மங்கம்மாள்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க