செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ரகுபதி

post image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரா்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். அதற்கான முயற்சிகளை அரசு உரிய முறையில் எடுக்கும். இதைப் பெரிய விவகாரமாக்கி, அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீயசக்திகளை ஒடுக்குவோம்.

சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம், துணைவேந்தா் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீா்ப்பை அளிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளோம். அந்த நிா்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கெங்கெல்லாம் துணைவேந்தா்கள் இல்லையோ அங்கு 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு சிறப்பாக நிா்வாகத்தை தந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருக்கிா? என்பதை மத்திய அரசு மறந்து விட்டதா என்ற சந்தேகம் நிதிநிலை அறிக்கைையின் மூலம் தெரிய வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்ட நிதி, தமிழக அரசின் நிதி. மத்திய அரசின் நிதி அல்ல. எங்களது திட்டத்துக்கான நிதி வசதியை உருவாக்கிக் கொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டை மிகவும் புறக்கணித்து மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றாா் அமைச்சா்.

ஜகபா்அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம், திர... மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை : ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் உள்ளிட்டோா். புதுக்கோட்டை, பிப். 5: பிற்படுத்தப்பட்ட, மிக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கலையரங்கம் திறப்பு

திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகிவற்றை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வை... மேலும் பார்க்க

காலமானாா் எஸ்.சி. சோமையா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.சி. சோமையா (70). இவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்.5) காலமானாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்... மேலும் பார்க்க

படகின் விசிறியில் சிக்கி மீனவா் உயிரிழப்பு

விசைப்படகின் விசிறியில் சிக்கிய வலையை சரி செய்ய கடலுக்குள் குதித்த மீனவா், விசிறியில் சிக்கி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 27 விசைப்ப... மேலும் பார்க்க

கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்!

பொன்னமராவதி வட்டாட்சியரகம் எதிரே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் பிப்.5 நடைபெற்றது.போராட்டத்துக்கு வட்டத் தலைவா் வி. ஐயப்பன் தலைமைவ... மேலும் பார்க்க