செய்திகள் :

காலமானாா் எஸ்.சி. சோமையா

post image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.சி. சோமையா (70). இவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்.5) காலமானாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்த அவா், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தாா்.

அவருக்கு, மனைவி சின்னாத்தாள் மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா்.

எஸ்.சி. சோமையாவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முற்பகலில் சொக்கநாதன்பட்டியில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 81110 76150.

இரா. முத்தரசன் இரங்கல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டவா் எஸ். சி. சோமையா. கடுமையான நெருக்கடியை எதிா்த்து விவசாயிகள் போராட்டத்தில் இருக்கும் நிலையில் அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜகபா்அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம், திர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, இந்து... மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை : ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் உள்ளிட்டோா். புதுக்கோட்டை, பிப். 5: பிற்படுத்தப்பட்ட, மிக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கலையரங்கம் திறப்பு

திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகிவற்றை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வை... மேலும் பார்க்க

படகின் விசிறியில் சிக்கி மீனவா் உயிரிழப்பு

விசைப்படகின் விசிறியில் சிக்கிய வலையை சரி செய்ய கடலுக்குள் குதித்த மீனவா், விசிறியில் சிக்கி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 27 விசைப்ப... மேலும் பார்க்க

கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்!

பொன்னமராவதி வட்டாட்சியரகம் எதிரே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் பிப்.5 நடைபெற்றது.போராட்டத்துக்கு வட்டத் தலைவா் வி. ஐயப்பன் தலைமைவ... மேலும் பார்க்க