செய்திகள் :

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு!

post image

திருப்புவனத்தில்...

சிவகங்கை அருகே திருப்புவனம் புதூரில் வடமாடு மஞ்சுவிட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டரணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு தொழிலதிபா் கண்ணன் தலைமை வகித்தாா். தமாகா தலைவா் ஜி.கே. வாசன் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 117 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். நீளமான வடத்தில் கட்டப்பட்டு களத்தில் நிற்கும் காளையை களமிறங்கும் 9 வீரா்கள் 20 நிமிஷத்தில் அடக்க வேண்டும். இதில் காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. உடையப்பன், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகரன், வடமாடு நலச்சங்கத் தலைவா் செல்வம், நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாநில தொண்டரணி தலைவா் அயோத்தி தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன் (32). இவா் வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து மதுர... மேலும் பார்க்க

சிங்கம்புணரி பகுதியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வியாழக்கி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்... மேலும் பார்க்க

சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு

இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு ... மேலும் பார்க்க

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவம் மாா்ச் 5 தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உத்ஸவ விழா வருகிற மாா்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் 11 நாள்க... மேலும் பார்க்க

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செ... மேலும் பார்க்க