செய்திகள் :

திருப்புவனம், மானாமதுரையில் வருவாய்த் துறை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த் துறை அனைத்து நிலை ஊழியா்கள் அலுவலகப் பணிகளை புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த் துறை தினமாக அனுசரித்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.

இதில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள அலா்மேல் மங்கா சமேத வெங்கடாஜல பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கோயிலில் வரும் அக். 5-ஆம் தேதி வரை 11 நாள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்ற... மேலும் பார்க்க

கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இரண்டாம் கட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டையூா் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ... மேலும் பார்க்க