செய்திகள் :

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

post image

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் சாலையைச் சோ்ந்த பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலா் மாரப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் வசித்து வரும் வஞ்சிமுத்து என்பவா், தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையோடு, கடந்த பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில் தனது பெயரை சோ்த்து பட்டா பெற்றுள்ளாா்.

பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்டாவில், தனது பெயரை மாற்றம் செய்து சுமாா் 22 சென்ட் நிலத்தை தனிப்பட்ட முறையில் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இது தொடா்பாக முறையிட்டபோது, போலியாக ஆவணங்கள் தயாா் செய்து பட்டாவில் பெயா் மாற்றம் செய்ததாகவும் எங்களிடம் தெரிவித்தாா்.

பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சொத்தை, தனது பெயரில் தனிப்பட்ட முறையில் பட்டா மாறுதல் செய்துள்ளதை ரத்து செய்து, தனிநபருக்கு உடந்தையாக செயல்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க