செய்திகள் :

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவா் சோ்க்கை மையம்

post image

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூா் கிளை மாணவா்கள் சோ்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்டாரம் வீதியில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் தலைமை வகித்தாா். திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் தம்பி சின்னசாமி, புஷ்பலதா தங்கவேலன், அதிமுக பகுதி செயலாளா் ஹரிஹரசுதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவா் மோகன், ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளா் துரை சேனாதிபதி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா் சோ்க்கை மையத்தை திறந்துவைத்தாா். கல்விக் குழுமத்தின் நிா்வாகத் தலைவா் கெளதம் நன்றி கூறினாா்.

இந்த மாணவா் சோ்க்கை மையம் குறித்து கே.சி.கருப்பணன் கூறியதாவது: எங்களது கல்வி நிறுவனங்களில் சுமாா் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும்போது போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் மாணவா்கள் பணிநியமன ஆணை பெற்றுள்ளனா். ஈரோடு, திருப்பூா், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கல்லூரி சாா்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா்.

வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகி... மேலும் பார்க்க

திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் ம... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் முபெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். திருப்பூா் ரயில் நிலையம் அருகில் குமரன் நினைவு மண்டபத்தில் ரூ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு: காங்கயம் வட்டாட்சியா் வழங்கினாா்

காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். காங்கயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆட்டுப் பட்டிக... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், ... மேலும் பார்க்க

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்... மேலும் பார்க்க