செய்திகள் :

``திருமணமான பெண் `திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை' என்று கூற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்

post image

திருமணமாகி கணவரை பிரிந்திருக்கும் பெண்கள் சில நேரங்களில் தங்களது ஆண் நண்பர் தங்களை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதுண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்ககளில் நிற்பதில்லை.

மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கி இருந்தார்.

அந்நேரம் அவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயது பி.எஸ்.சி படிக்கும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் உறவு வைத்துக்கொண்டனர். ஆனால் இப்போது அந்த மாணவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி அப்பெண் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் கொடுத்துள்ள புகாரில், 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023-ம் ஆண்டு ஜூலை வரை 23 வயது வாலிபர் தன்னுடன் உறவு வைத்துக்கொண்டார். அதோடு தனக்கு (மனுதாரர்) விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தையும் கூறினார்.

2022-ம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து கிடைத்துவிட்டது. ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மாணவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதிகள் நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணையின் போது, பெண் தரப்பில் தெரிவித்த வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மும்பை உயர்நீதிமன்றம்

இது தொடர்பாக நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்தில், ''தனது விருப்பம் இல்லாமல் மாணவர் உறவு வைத்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு ஆண்டாக உறவு குறித்து வெளியில் சொல்லவில்லை. அதோடு மாணவருடன் ஓரிரு முறை லாட்ஜிக்கும் சென்று வந்துள்ளார். எனவே அவரது குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. மாணவருடன் உறவு வைத்துக்கொண்ட போது சம்பந்தப்பட்ட பெண் திருமண உறவில்தான் இருந்துள்ளார்.

திருமண உறவில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது. திருமணமான, நான்கு வயது குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருடன் நீண்டகால தொடர்பை பேணுவதற்கோ எந்த நியாயமான சாத்தியமும் இல்லை" என்று கூறி மாணவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க