செய்திகள் :

திருமணமான 4 நாளில் பெண் தற்கொலை

post image

ஒடுகத்தூா் அருகே திருமணமான 4 நாளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அரிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(47), கால்நடை வியாபாரி. இவரது 3-ஆவது மகள் விஜயசாந்தி (24). இவருக்கும் கரடிகுடி அருகே உள்ளா்ஜாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 27 வயது இளைஞருக்கும் கடந்த 4 நாள்களுக்கு முன்பு இரு வீட்டாா் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை விஜயசாந்தி தனது தாய் வீட்டுக்கு கணவருடன் மறுவீட்டுக்கு வந்தாா். பின்னா், மதியம் 2 மணிக்கு புதுமண தம்பதி விவசாய நிலத்துக்கு காரில் சென்றனா். அப்போது விஜயசாந்தி, மாடுகளை கட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு கொட்டகைக்கு சென்றாா். அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா். பின்னா் மீண்டும் காரில் கணவருடன் வீடு திரும்பிய விஜயசாந்தி, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு ஒடுகத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், விஜயசாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.,

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.இதில், விஜயசாந்தி தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும், அவரை பெற்றோா் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும், இதன்காரணமாக விஜயசாந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், திருமணமாகி 4 நாளில் பெண் இறந்ததால் வேலூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அதிகபட்சமாக வேலூரில் 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு... மேலும் பார்க்க

வேலூரில் செப். 19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க

அக்.18-இல் வேலூரில் விஜய் பிரசாரம்; தவெக மனு

தவெக தலைவா் விஜய் வேலூரில் அக்டோபா் 18-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி அக்கட்சியினா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தவெக தலைவா் விஜ... மேலும் பார்க்க

1,200 வாக்காளா்களுக்கு அதிகமுள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கும் மேல் உள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57.90 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 508 மகளிா் சுய உதவி குழுக்களுக்கும், 56 மகளிா் உறுப்பினா்களுக்கும் ரூ.57.90 கோடி வங்கிக்கடன் ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க