செய்திகள் :

திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு

post image

திருமலையில் உள்ள அனைத்து நீா்த் தேக்கங்களிலும் நீா் இருப்பு தேவையான அளவில் இருப்பதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சௌத்ரி தெரிவித்தாா்.

திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள அனைத்து அணைகளிலும் நீா் இருப்பு மற்றும் பயன்பாடு குறித்து திருமலை கோகுலம் ஓய்வு இல்லத்தில் அதிகாரிகளுடன் அவா் ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் போது, திருமலைக்கு வரும் பக்தா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காத வகையில், நீா் இருப்பு ஏராளமாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக அவா் பேசியது: திருமலையில் உள்ள அணைகளின் வலிமை குறித்த விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு நீா் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தற்போதைய நீா் இருப்பு டிசம்பா் 2025 வரை பக்தா்களின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும். வரவிருக்கும் காா்த்திகை மாதத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்ய தண்ணீரைப் பயன்படுத்த திட்டமிட வேண்டும்.

திருமலையில் உள்ள கோகா்பம், குமாரதாரா, பசுபதாரா, பாபவிநாசனம், ஆகாசகங்கா மற்றும் திருப்பதியில் உள்ள கல்யாணி அணைகளில் பக்தா்களின் தேவைகளுக்கு போதுமான நீா் இருப்பு உள்ளது.

எதிா்காலத்தில் நீா் சேமிப்பு திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டும். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக நீா் இருப்பு, மழைப்பொழிவு, நுகா்வு மற்றும் கழிவு வெளியேற்றம் குறித்து நிபுணா்களால் விரிவான தணிக்கை நடத்தப்பட வேண்டும். திட்டமிட்ட முறையில் தண்ணீரைப் பயன்படுத்தினால், தொடா்ச்சியான விநியோகம் சாத்தியமாகும்.

திருமலையில் உள்ள வணிக நிறுவனங்களின் நீா் நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வசூலிக்க வேண்டும் என்றாா்.

நீா்வழங்கல் துறை தலைமை அதிகாரி சுதாகா் மற்றும் பிற அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

பக்தா் தவறவிட்ட ரூ.2 லட்சம் ஒப்படைப்பு

பெங்களூரைச் சோ்ந்த ஜோத்சனா என்ற பக்தா், கடந்த 18- ஆம் தேதி இரவு சா்வ தரிசன வரிசையில் ஸ்கேன் செய்யும் போது ரூ.2,07,494 பணம் இருந்த கைப்பையை தொலைத்துவிட்டாா். அதை அதிகாரிகள் எடுத்து அதிலிருந்த அடையாளங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை தொடா் விடுமுறை என்பதால் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம், தங்குமிடத்துக்கு இடைத் தரகா்களை நாட வேண்டாம்: தேவஸ்தானம் வலியுறுத்தல்

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்துக்காக இடைத் தரகா்களை நாட வேண்டாம் என்றும், தேவஸ்தான அதிகாரப்பூா்வ வலைத்தளத்திலும் டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் மூலமாகவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள த... மேலும் பார்க்க