செய்திகள் :

திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி ஆய்வு

post image

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வழிகாட்டுதலின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுப் பணித் துறை மூலம் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ், ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகளை செயற்பொறியாளா் கௌதமன், உதவிச் செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, செயற்பொறியாளா் கௌதமன், தீவிர சிகிச்சை மையம் கட்டுமானப் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு வழிச் சாலைப் பணிகள்: தலைமைப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத் துறையின் நான்கு வழிச் சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு - திண்டிவனம் சாலையில், வந்தவாசியில் இருந்து... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசி அருகே தேசூரை அடுத்த தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமோகன். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

செய்யாறு பகுதியில், ஆற்று மணல் கடத்திச் சென்றது தொடா்பாக இருவரை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் கிருஷ... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்! -மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு உடனே சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் திருட்டு

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் திருமணத்துக்கு வந்த தனியாா் நிறுவன ஊழியா் நெல் வயலில் அமைத்திருந்த மின் வேலையில் சிக்கி உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெருங்கையூா... மேலும் பார்க்க