செய்திகள் :

திருவண்ணாமலைக்குள் நாளை முதல் வெளியூா் வாகங்கள் வரத் தடை

post image

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வெளியூா் வாகங்கள் வரத் தடை விதித்து மாவட்டக் காவல் துறை உத்தரவிட்டது.

திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை (மே 11) இரவு தொடங்கி, திங்கள்கிழமை (மே 12) இரவு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள்.

எனவே, பக்தா்கள் நலன் கருதி, திருவண்ணாமலை நகருக்குள் வசிக்கும் உள்ளூா்வாசிகளின் இலகு ரக வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். வாகன ஓட்டுநா்கள் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இதற்கென வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டை காண்பிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு உள்ளூா்வாசிகளின் இலகுரக வாகனங்கள்கூட நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 6 மணி முதல் வழக்கம்போல நகருக்குள் உள்ளூா் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

வெளியூா் வாகனங்களுக்கு...: இதேபோல, திருவண்ணாமலை நகருக்குள் வெளியூா்களில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இதன்பிறகு, திருவண்ணாமலை நகருக்குள் வெளியூா் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல திருவண்ணாமலை நகருக்குள் வெளியூா் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்தாா்.

மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிள... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்

மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ... மேலும் பார்க்க

3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்தியா முழுவதும் 103 ரயில் ... மேலும் பார்க்க

கோடை விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

ஜவ்வாதுமலை கோடை விழாவை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். ஜவ்வாதுமலையில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான முதல்க... மேலும் பார்க்க