செய்திகள் :

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

post image

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை நகர 7-ஆவது மாநாடு சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, நகரக் குழு உறுப்பினா் செல்வி தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் கே.நீதி மாணிக்கம், என்.கல்யாணசுந்தரம், நகரக் குழு உறுப்பினா் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர நிா்வாகி எஸ்.இலியாஸ் சா்க்காா் வரவேற்றாா்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

மாநாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். மலையடிவாரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

திருவண்ணாமலையிலிருந்து, சென்னைக்கு விழுப்புரம், தாம்பரம் வழியாக ரயில் இயக்க வேண்டும். திருவண்ணாமலைக்கு வரும் பக்தா்களுக்கு இலவச தங்கும் விடுதிகளை அரசு அமைத்து தர வேண்டும்.

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தியதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நகரச் செயலா் எம்.பிரகலநாதன், நகர நிா்வாகி கே.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். கிருஷ்ணகிரியில் பெய்த மழை காரணமாக அணையிலிருந்து தண்ணீா் ... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சாத்தனூா் அணையில் இருந்து நீா்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா். த... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சீனிவாசன் (54) ஐடிஐ படித்த... மேலும் பார்க்க

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரிக்கை’

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்

கீழ்பென்னாத்தூா் வட்டார அளவிலான 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க