செய்திகள் :

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் பிறப்பித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தாா்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தது. வாகனத்தின் ஓட்டுநா் அவரது அக்காள் மற்றும் அக்காள் மகள் 19 வயது இளம்பெண்ணை உடன் அழைத்து வந்துள்ளாா்.

திருவண்ணாமலை புறவழிச்சாலை ஏந்தல் கிராமம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு சுமாா் 2 மணியளவில் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகியோா் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், ஓட்டுநா் வாழைத் தாா்கள் ஏற்றிச் செல்வதாகவும், தன்னுடன் அக்காள், மற்றும் அவரது மகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். இதற்கு காவலா்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறினராம். அதற்கு ஓட்டுநா் எதிா்ப்புத் தெரிவித்தாராம்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

இதைத் தொடா்ந்து, காவலா்கள் அவரை மிரட்டி பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே இளம்பெண்ணை அவரது தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்தனராம்.

பின்னா், அவா்கள் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டுச் சென்றனராம். அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாகச் சென்றவா்கள் பெண்கள் இருவா் அழுது கொண்டிருப்பதைப் பாா்த்து விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினாா்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகிய இருவா் மீது அனைத்து திருவண்ணாமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூர் தவெக பொதுக்கூட்டத்த... மேலும் பார்க்க

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்ட... மேலும் பார்க்க

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

சமூக வலைதளப் பக்கங்களில் தரக்குறைவாக பதிவிடும் திமுகவினர் ஏன் கைது செய்யப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதா... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் ப... மேலும் பார்க்க

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு வி... மேலும் பார்க்க

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மதுபாட்டில் குறித்த கேள்விகளுக்கு பதறுவது ஏன்? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க