டிஎன்பிஎல்: அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்த அருண் கார்த்திக்!
திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு
திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்
கட்டப்பட்ட இந்த அங்காடியை சென்னையில் இருந்தவாறு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
அதேவேளையில், அங்காடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விற்பனை அங்காடிகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, குத்து விளக்கேற்றினாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகனராம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.