செய்திகள் :

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

post image

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அம்பத்தூா் (ஆடவா் மற்றும் மகளிா்), கும்மிடிப்பூண்டி மற்றும் வடகரை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அத்துடன், தனியாா் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-26-ஆம் ஆண்டில் சேரவும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவிடும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், திருவள்ளூா் மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், (9486939263, 9444139373) ஆகிய 6 சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டண தொகை ரூ. 50 விண்ணப்பதாரா் மூலம் செலுத்தலாம். எனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 16-ஆம் தேதி கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். அதன் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு, இதே இணையதளத்தில் வெளியிடப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க