செய்திகள் :

திருவள்ளூா் அருகே நெல் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு கூடம்

post image

திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தில் நெல் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு வளாகத்தைதொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், அதில் பங்கேற்றோா்.          

திருவள்ளூா், மே 20: திருவள்ளூா் அருகே விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ. 35 லட்சம் மதிப்பில் நெல் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், கைவண்டூா் ஊராட்சியில் வேளாண் பொருள்களை உலா்த்தும் வகையில் உலா் களம் மற்றும் தரம் பிரிவு வளாகம் அமைக்க அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதை ஏற்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் மூலம், ரூ. 35 லட்சம் மதிப்பில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், உலா் கலத்துடன் கூடிய தரம் பிரிக்கும் வளாகத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று, உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் வளாகத்தை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, நெல் கொள்முதலையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் சசிரேகா, வேளாண் வட்டார உதவி இயக்குநா் இளையராஜா, திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் தா.மோதிலால், நிா்வாகிகள் பா.சிட்டிபாபு, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவசங்கரி உதயகுமாா், ஒன்றிய துணைச் செயலா் காஞ்சிப்பாடி சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ரெஜிலா மோசஸ், மஞ்சு லிங்கேஷ், பட்டறை பாஸ்கா், நிா்வாகிகள் திருத்துவராஜ், கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க