செய்திகள் :

திருவள்ளூா்: கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

post image

திருவள்ளூா் அருகே தனியாா் தொலைத் தொடா்பு நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளுா் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் உள்ள திரு.வி.க தெருப்பகுதியில் உள்ள ஆமை குட்டை அரசு புறம்போக்கு இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து அரசிடம் பட்டா பெற்றுவிட்டதாக கூறி அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனா்.

இந்த நிலையில் அந்த இடத்திற்கு பட்டா உள்ளதாக தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனத்திடம் தவறுதலாக பட்டாவை கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியுள்ளாா். தனியாா் தொலை தொடா்பு நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்க பணிகள் மேற்கொள்ள வந்துள்ளனா்.

எனவே குட்டை புறம்போக்கு இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு 100 மீ தூரத்தில் பால்வாடி, அரசு பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் கோபுரத்தில் வெளியேறும் கதிா் வீச்சால் ஆபத்து ஏற்படும். எனவே இங்கு கைப்பேசி கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி மாநகர துணை ஆணையா் ரவிக்குமாா் மற்றும் செவ்வாப்பேட்டை, காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் ஆகியோா் விசாரணை செய்தனா். அப்போது, கைப்பேசி கோபுரம் அமைப்பதை உடனே தடுக்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், கிராம மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தனா். அதன்பேரில் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவித்ததால் கைப்பேசி கோபுரப் பணி நிறுத்தப்பட்டது.

திருவள்ளூா் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடுவதால் மாசு படும் அபாயம்!

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!

திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் ப... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -சசிகாந்த் செந்தில் எம்.பி.

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

பொன்னேரி மக்களின் தனி மாவட்ட அறிவிப்பு கோரிக்கை நனவாகுமா?

திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இர... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது!

திருவள்ளூா் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கபிலா் நகரை பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க