திருவள்ளூா்: நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்படும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலம் ‘உயா்வுக்கு படி’ என்ற சிறப்பு முகாமில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினா்.
திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்விக்கு வழிகாட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் உயா்கல்வியில் சேராத 212 மாணவா்கள் பங்கேற்றனா்.
ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று உயா் கல்வியில் சேருவதற்கான ஆணைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினா்.
அந்த வகையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி-10, அரசு கலைக் கல்லூரி-18, துணை மருத்துவ படிப்பு-5, திருவள்ளூா் தொழிற்பயிற்சி நிலையம்-4, அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையம்-2, சோளிங்கா் அரசு கலைக் கல்லூரி-1, அம்பத்தூா் தொழிற்பயிற்சி நிலையம்-1, கும்மிடிப்பூண்டி தொழிற் பயிற்சி நிலையம்-1, திருத்தணி ஜி ஆா் டி கல்லூரியில்-4, அம்பத்தூா் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்-3, ஆவடி சோக்கா இக்கடா தனியாா் கல்லூரி-2 என 51 மாணவ, மாணவிகள் நேரடி சோ்க்கை நடத்திஅதற்கான ஆணைகளையும் அவா்கள் வழங்கினா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), டி.டழ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), வருவாய் கோட்டாட்சியா் ரவிசந்திரன், உதவி ஆணையா் கலால் கணேசன், பட்டரைபெரும்புதூா் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முதல்வா் கயல்விழி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.