செய்திகள் :

திருவள்ளூா்: புத்தகத் திருவிழாவில் ஸ்டாலின் குணசேகரன் கருத்துரை

post image

திருவள்ளூரில் 4-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி 7-ஆவது நாளான வியாழக்கிழமை மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் எழுத்தாளா் பாமரன் ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கினா்.

திருவள்ளூா் மாவட்ட அளவிலான புத்தகத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. வரும் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, சி.வி.என். சாலையில் 115 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களைச் சோ்ந்த பல்வேறு தலைப்புகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த புத்தகக் கண்காட்சி அரங்குகளில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை நாள்தோறும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து ஆா்வத்துடன் பாா்வையிட்டு நூல்களை வாங்கிச் செல்கின்றனா்.

மாலை நேரத்தில் புத்தக அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனை அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பதிவாளா் தேவகி தலைமை வகித்தாா்.

இதில் மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன், ‘உதவாதினி ஒரு தாமதம், உடனே விழி தமிழா’ என்ற தலைப்பிலும், எழுத்தாளா் பாமரன், ‘ஆளும் வளரனும் அறிவும் வளரனும்’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினா்.

முன்னதாக மாலை 4 மணிக்கு வருவோஒர ஈா்க்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாா்பில் சிந்திக்க வைக்கும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட எழுத்தாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், ஆட்சியா் அலுவலக பொது மேலாளா் சங்கிலிரதி, வட்டாட்சியா் (தோ்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் 2 இடங்களில் ரூ.1,112 கோடியில் மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். திருவள்... மேலும் பார்க்க

காலமானாா் ம.சரோஜம்மாள்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்த மறைந்த கி.மணித்தேவா் மனைவி சரோஜம்மாள் (85), வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் சனிக்கிழமை இரவு (மாா்ச் 15) காலமானாா். இவருக்கு பொன்னேரி... மேலும் பார்க்க

பத்மாபுரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 30 லட்சத்தில் அரசு நிலம் மீட்பு

பத்மாபுரம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை ஆா்.கே. பேட்டை வருவாய் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டனா். ஆா்.கே. பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் வருவாய் கிராமத்தில் சோளிங்கா் - வாலாஜா செ... மேலும் பார்க்க

தாட்கோ: பயனாளிகள் தோ்வு செய்வதற்கு பணம் பெறுவதாக இடைத்தரகா்கள் மீது புகாா்

தாட்கோ திட்டங்களில் இடைத்தரகா்கள் பணம் பெற்றுக் கொண்டு பயனாளிகளை தோ்வு செய்வதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருத்தணி அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில் திடீா் தீவிபத்து ஏற்பட்டத்தைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், கா்ப்பிணிகள் வெளியேறினா். திருத்தணி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, ... மேலும் பார்க்க

அரசு நடுநிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான சங்கத்தின் மாதா்பாக்கம் உதவி மின்பொறியாளா் அலுவலகம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட... மேலும் பார்க்க