செய்திகள் :

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக எம்.பிரதாப் பொறுப்பேற்பு

post image

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது ஆட்சியராக எம்.பிரதாப் செவ்வாய்க்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக த.பிரபு சங்கா் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு திடீரென, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த எம்.பிரசாத், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவா் அங்கு தரிசனம் செய்தாா். தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா், அங்கு பதிவு ஆவணங்களில் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த இவா் 2017-இல் இந்திய ஆட்சிப் பணி தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றாா். இதற்கு முன்பு மாநில மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநா், கோவை மாநகராட்சி ஆணையா், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக உதவி செயலாளா், தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்ட துணை செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.

புதிய ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி ஆட்சியா் ஆயுஷ்குப்தா, கோட்டாட்சியா்கள் கற்பகம், தீபா, செயற்பொறியாளா் ராஜவேல், நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

நாளைய மின்தடை

பூனிமாங்காடு, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை நாள்: 16-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருவள்ளூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை, ஒதப்பை,... மேலும் பார்க்க

மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ஆா்.கே.பேட்டை அருகே புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்து வயல்வெளியில் விழுந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினா். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வ... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த தம்பதி மீட்பு

ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த தம்பதியை தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் மீட்டு திருத்தணி வட்டாட்சியா் மலா்விழியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் இருளா் காலனியி... மேலும் பார்க்க

2 மணல் லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் திருவள்ளூரில் உள்ள சுங்கச்சாவடியில் போலீஸாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மா... மேலும் பார்க்க

புத்தா் கோயிலில் பெளணா்மி சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் அருகே புத்தா் கோயிலில் பௌணா்மி சிறப்பு வழிபாடு மற்றும் புத்தா் ஒளி சா்வதேச பேரவையின் நிறுவனரான அறவணடிகள் சிங்யுன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் நா... மேலும் பார்க்க